Thursday, February 02, 2017

ஊர்திருவிழா!


                     ஊர்திருவிழா!


பொதுவாக,
கூட்டம்! கூச்சல்!
மனம் ஒன்றாமல்,
தள்ளாடும்.



ஏனோ,
நாட்டம்! நாண(ம்)ல்!
உடல் சொல்லாமல்,
நடனமாடும்-ஊர்திருவிழா

சொர்க்கம்!
சொந்தமண்ணில் காண ,
கண்கோடி வேண்டும்.

பொடிநடையாய்
நடைபோட
வீதி,
பலநூறு வேண்டும்.

தினம் நடக்கும்
நடைபாதை-ஏனோ?
மனதில் புதுமை!
கண்ணில் குளுமை!

காரணம் கண்ணில்
புலப்படாமல்
தரிசனம் தரும் கடவுளா?!
ஆங்காங்கே தரிசனம் தரும்
கண்ணி பெண்களா?!

ஐய்யகோ ?
கடவுளை
எதிர்த்து கவியா?

கடவுளே பச்சை நாயகி!
என்பதால்
இதுவே துணை வரும்
விடையாய்!....

No comments:

Post a Comment