நீயின்றி அமையாது
சற்றென்று என் வாழ்வில் வந்து
விறுவிறுவென என்னுள் கலந்து
தாராளமாய் என்னை தவிடு பொடியாக
மாற்றியவளே
உன்னுடன் பேச நினைப்பதெல்லாம்
பேசியிருந்தால் என்றோ நான்
ஊமையாக அமைதி காத்திருப்பேன்
இன்றும் சொல்ல வார்த்தைகள் இல்லாமல்
என் தாய்மொழி ஆழம் தெரியாமல்
விழி பிதுங்கி விழித்திருக்கிறேன்
ஆயிரம் உறவுகள் என்னோடு இருந்தாலும்
உன்னையே என் கண்கள் தேடுகிறது
காரணம் என் கவியின் காரண கர்த்தா
நீயின்றி அமையாது
உன்னாலே நான்
நீயின்றி என் வாழ்வும்
வீண்!
No comments:
Post a Comment